Tuesday, January 5, 2010

பேராசிரியர் அ. அய்யாசாமியின் படைப்புகளுக்குத் தமிழக அரசின் பரிசு

பேராசிரியர் அ. அய்யாசாமி அவர்களின் வைக்கம் கவிதை நாடகமும் தென்னகத்தின் எழுச்சி என்ற 'தி ரைசிங் சன்' வார இதழில் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கத் தொகுப்பும் விழிகள் பதிப்பகத்தாரால் 2008-இல் வெளியிடப்பட்டன.
இதில் நாடகப் புத்தகப் பிரிவில் வைக்கத்திற்கும் மொழிபெயர்ப்புப் பிரிவில் தென்னகத்தின் எழுச்சிக்கும் தமிழக அரசின் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி பதினைந்தாம் தேதி நடக்கவிருக்கும் திருவள்ளுவர் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும். ஒரே ஆண்டில் ஒரு ஆசிரியரின் இரு புத்தகங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்படத்தக்கது.

2 comments:

sivaprakasam srinivasan said...

We are very proud about this.Vaaltha vayathiliai,vanankukiren.

sivaprakasam

pachanayaki palaniappan said...

நம்மவர்களில் ஒருவர் இப்பரிசுகளை பெற்றமைக்கு பெருமிதம் அடைகிறோம் .