Friday, June 6, 2008

பாவம் பாட்டி

சுட்டெரிக்கும் வெயில்

சூரியனுக்கே சுடுகிறதாம்

குட்டை குளமெல்லாம்

குழந்தைகளுக்கு மைதானம்

மட்டைப் பந்தாட்டத்தில்

மாவீரன் மாரிமுத்து

கட்டிப் பஞ்சாயத்தில்

கவர்ந்த வெற்றி மாலை

கொட்டம் அடித்துக்கொண்டு

கொண்டாடும் நேரம்

திட்டம் ஏதுமின்றி

திடீர் கோ டை மழை

முட்ட நனைந்து நின்ற

முருகனை கே ட்டதற்கு

பாட்டி வடகம் போ ட்டதால்

பாவம் அது வென்றான்

No comments: