1. அறுக்கமாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பதெட்டு அருவாளு.
2. பழைய குருடி கதவத் தெறடின்னு. தவறாக நடந்து மாற்றி நன்றாக செய்துவிட்டு, மீண்டும் தவறாக்கும் போது "பழைய குருடி கதவத் தெறடிங்குற கதை ஆயிருச்சு"என்று சொல்வார்கள். 3. மொசப் புடிக்கிற நாய் மூஞ்சிய பார்த்தா தெரியாதா? 4. நான் புடிச்ச மொசலுக்கு மூணு காலுங்காத. 5. நாய்க்கு பேரு முத்துமாலை. பொருத்தமில்லாத ஒன்று என்றால் எள்ளலாக "நாய்க்கு பேரு முத்துமாலையாமா" என்பார்கள். 6. செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி 7. ஆனதுக்கு சொன்னா அறிவுண்டு நெனவுண்டு. ஆகாவழிக்குச் சொன்னா இல்லிடத்தையும் தோத்துட்டுப் போக வேண்டியதுதான். அறிவுரை கூட உருப்பட வாய்ப்பிருப்பவனுக்குத்தான் கொடுக்க வேண்டும். 8. ஆடமாட்டாதவன் நெலம் கோணைன்னு சொன்ன கணக்கா இருக்குது. கோணை - கோணல் 9. நாயக் குளிப்பாட்டி நடுவூட்டுல வெச்சாலும் நாக்கத் தொங்கக் போட்டுட்டு இட்டாரிக்குத்தான் போகும். 10. கெழவன் கோமணம் கட்டுன மாதிரி 11. அழுதழுது பெத்தாலும் அவதான் பெக்கோணும். பெக்கோணும் - குழந்தை பெறுதல். 12. பொழப்பு கெட்ட நாசுவன் பொண்டாட்டி தலைய செரச்சானாம். 13. பொழக்கிற புள்ளைய பேல உட்டு பார்த்தா தெரியாதா? 14. எல்லோரும் சிரிச்சாங்கன்னு பூனை பொடக்காலில போயி சிரிச்சுதாம். 15. மொளச்சு மூணு எலை உடுல. வயதில் சின்னவர்கள் ஏதேனும் பிடிக்காத காரியத்தைச் செய்யும் போது உபயோகிப்பது. 16. எங்கயோ போற மாரியாத்தா எம் மேல வந்து ஏறாத்தாங்குற கதையா 17. நட்டாத்துக்கு போனாலும் நாய்க்குச் சலக்குத் தண்ணிதான். நடு ஆற்றுக்குச் சென்றாலும் நாய் 'சலக் சலக்' என்று நக்கித்தான் குடிக்கும். என்னதான் புகழ், பணம் கிடைத்தாலும் அவனவன் அவனவன் தகுதிக்கு ஏற்பதான் நடப்பார்கள். 18. புது வட்டலக் கண்டா நாய் எட்டு வட்டல் தண்ணி குடிக்குமாம். வட்டல் - தட்டம்.
Thursday, October 16, 2008
நம்மவர்களிடையே இன்னும் புழங்கிவரும் பழமொழிகள்
Posted by
pachanayaki palaniappan
at
8:24 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஆஹா கிளம்பீட்டாங்கய ...கிளம்பிடங்க ;-)
Post a Comment