நாடு செழிக்கட்டும் நன்மைகள் மலரட்டும்
நலமே வருமென்ற நம்பிக்கை வளரட்டும்
ஓடும் நதியெல்லாம் ஒருங்கிணைப்பு ஆகட்டும்
ஒருமித்த கருத்துக்கள் ஓங்கிப் பெருகட்டும்
பாடும் அலையெல்லாம் பாரதத்தின் புகழ் பாடி
பாரினில் வல்லரசாய் பாங்குடன் உயர்த்த வரும்
ஈடு இணையற்ற இரண்டாயிரத்து ஒன்பதை
இனிதே வரவேற்ப்போம் இறைவன் துணை வருவான்.
No comments:
Post a Comment